Pages

Saturday, January 30, 2016

                                                      பாண்டே  நேர்காணல்

பாண்டே  “நேர்காணல்”
பாண்டே: ஐயா!வணக்கம்.நான்கும் நான்கும் சேர்வதால் வரும் விளைவு பற்றி இன்றைய நேர்காணல் அமைகிறது.தங்கள் கருத்தைக் கூறுங்கள்.

தலைவர் பச்சையப்பன்: நான்கும் நான்கும் எட்டு என்பதில் என்ன ஐயம்.

பாண்டே:அப்படியானால் ஏழும் ஒன்றும் எட்டு இல்லை என்கிறீர்களா?

தலைவர் ப.:நான் அவ்வாறு எதுவும் கூறவில்லையே.

பாண்டே” சற்று முன்பு நீங்கள் நான்கும் நான்கும் எட்டு என்றுதானே கூறினீர்கள்?

தலைவர்:உங்கள் கேள்வி அப்படி இருந்ததால்தான் அதனைக் கூறினேன்.அதற்காக ஏழும் ஒன்றும் எட்டு இல்லை என்று ஆகிவிடுமா?
பாண்டே:பார்த்தீர்களா? பார்த்தீர்களா? சென்ற முறை இங்கே  நேர்காணலுக்கு வந்தபோது ஆறும் இரண்டும் எட்டு எனக் கூறினீர்கள்.இப்போது உங்கள் வசதிக்காக அதனை ஏன் மறைத்துவிட்டீர்கள்?

தலைவர்:நீங்கள்தான் மாறிமாறிப் பேசுகிறீர்கள்.உங்கள் கேள்விக்கு ஏற்பவே என் கருத்தைத் தெரிவித்தேன்.நீங்கள் குழப்புவதால் இப்போது எல்லாவற்றையும் சொல்லுகிறேன்.நான்கும் நான்கும் எட்டு.ஆறும் இரண்டும் எட்டு.ஏழும் ஒன்றும் எட்டு.ஐந்தும் மூன்றும் எட்டு.

பாண்டே:இதுதான் உங்கள் உறுதியான முடிவா?

தலைவர்:ஆமாம்.இதுதான் என் உறுதிவாய்ந்த முடிவு.

பாண்டே: நேயர்களே!இப்போது தலைவர் ‘ப’கூறிய கருத்தைக் கேட்டீர்கள்.அவர் சில உண்மைகளை மறைக்கப்பார்க்கிறார்.பத்தில் இரண்டு போனால் எட்டு.ஒன்பதில் ஒன்று போனால் எட்டு.பதினொன்றில் மூன்று போனால் எட்டு.பன்னிரண்டில் நான்கு போனால் எட்டு.இந்தச் செய்திகளையெல்லாம் தலைவர் ஏன் விட்டுவிட்டார்.அவருக்குத் தேவையானதை மட்டுமே அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.இதனை உங்கள் கவனத்திற்குக் கொணரவிரும்புகிறேன்.
தலைவர் சீற்றத்துடன் எழுந்து:என்னய்யா!நேரத்துக்கு ஒரு பேச்சுப் போல் அமைந்துள்ளதே!என்ன நேர்காணலய்யா நடத்துகிறீர்கள்?(வெளீநடப்புச் செய்கிறார்.?

(உங்களுக்குத் தலைசுற்றினால் பொறுத்தருள்க.)

No comments :

Post a Comment